ரிஷாத் பதியுதீனை வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் ​வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (10) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முற்படுத்தப்பட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவியமை மற்றும் தொடர்பினை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *