போப் பிரான்சிசுக்கு கொலை மிரட்டல்!
போப் பிரான்சிஸ் பெயரில் மூன்று துப்பாக்கி குண்டுகளை அனுப்பி வைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் இத்தாலிய பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
மிலனில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள் மூன்று தோட்டாக்கள் அடங்கிய ஒரு கடித உறை வத்திக்கானுக்கு அனுப்பப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
குறித்த கடிதமானது பிரான்சில் இருந்து அனுப்பியுள்ளதையும் அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ளது. இத்தாலிய காவல்துறை தெரிவித்த தகவலில், மூன்று தோட்டாக்கள் ஒரு கைத்துப்பாக்கிக்கானது எனவும், அந்த கடித உறையானது வத்திக்கானில் நிதிச் செயல்பாடுகளைக் குறிக்கும் ஒரு செய்தியையும் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் வத்திக்கான் நிர்வாகம் எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.