செல்பி எடுக்க முயன்ற இளைஞர் கடலில் வீழ்ந்தவர் சடலமாக மீட்பு!

செல்பி எடுப்பதற்கு முயன்ற போது யாழ்ப்பாணம் பண்ணை கடலில் நேற்று(8) தவறி வீழ்ந்தவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நாவலர் வீதியை சேர்ந்த கந்தசாமி கௌதம் (வயது 29) என தெரியவந்துள்ளது.

யாழ் நகரில் உள்ள தனியார் விடுதியில் பணியாற்றிவரும் இவர், நேற்றுமாலை நண்பர்களுடன் பண்ணை பாலத்தில் நண்பர்களோடு நின்றபோது, செல்பி எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதன்போது தவறி கடலுக்குள் வீழ்ந்தார். யாழ்ப்பாண பண்ணை கடலில் தினமும் நீர் ஓட்டம் இருப்பதனால் நீரில் மூழ்கிய அவரை நீர் அடித்து சென்றது.

இதனை அடுத்து தேடும்பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிலையில், இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *