பயண கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை!

குறுகிய காலத்திற்குள் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமே தீர்வாக இருக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் துணைத் தலைவர்- உட்சுரப்பியல் நிபுணர் மணில்க சுமனதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை பெரும்பாலும் நான்காவது அலையில் இருப்பதாகவும், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாடு ஒரு பேரழிவு நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டின் தடுப்பூசி இயக்கத்தை விட வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த இடைவெளியில். குறுகிய கால பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதே ஒரே வழி, என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *