கொழும்பில் 75 சதவீதமானவர்களுக்கு டெல்டா வைரஸ்!

கொழும்பு நகர எல்லைக்குள் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் 75 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.

ஜூலை மாத ஆரம்பத்தில் 19.3% டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் அது தற்போது 75% ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *