கொலை செய்த பெண்ணை மூட்டையில் அடைக்கப்பட்டு விட்டு சென்றதால் பரபரப்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் பெண் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து மூட்டையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நேற்று இரவு வாழைச்சேனையில் பெண்ணை கொலை செய்த நபர் ஒருவர் அவரை மூட்டையாக உரைப்பையில் வைத்து கட்டி அதனை எடுத்துச் சென்று கடை ஒன்றின் முன்னால் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இது தொடர்பில் 28 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது கைதுசெய்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வாழைச்சேனை சித்தி லைலா சோர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் கடை ஒன்றை நடாத்திவருவதாகவும் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க வீதியில் வசித்துவரும் குறித்த பெண்ணுக்கும் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துவந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த இளைஞன் பெண்ணிடம் சென்று பணம் கேட்ட நிலையில் இடம்பெற்ற வாக்கு வாதத்தின் எதிரொலிகாக அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து உரைப்பையில் மூட்டை கட்டயதாகவும் கூறப்ப்டுகின்றது.

அதன்பின்னர் அந்த சடலத்தை மூட்டையாக எடுத்துச் சென்று வாழைச்சேனை பொதுச் சந்தை பகுதியிலுள்ள நண்பன் ஒருவரின் கடைக்கு முன்னால்மூட்டையை வைத்த இளைஞர், இது இருக்கட்டும் வந்து எடுக்கின்றேன் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.

இதனையடுத்து நண்பன் நீண்ட நேரமாகியும் மூட்டையை எடுக்க வரவில்லை என்ற நிலையில் மூட்டை அருகில் சென்ற போது ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து மூடையை திறந்து பார்த்துள்ளார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=3417100113&adf=3008535365&pi=t.aa~a.3987527503~i.10~rp.4&w=372&fwrn=7&fwrnh=100&lmt=1628248432&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2445088797&psa=1&ad_type=text_image&format=372×280&url=https%3A%2F%2Fjvpnews.com%2Farticle%2Fwoman-who-was-murdered-and-stuffed-in-a-bundle-1628229565&flash=0&fwr=0&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1628248431607&bpp=19&bdt=6446&idt=-M&shv=r20210802&mjsv=m202108040201&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De2cec29cbafc0886%3AT%3D1628248429%3AS%3DALNI_MYXuz8ki0cbAqKKcX5HEmK7YHMQXw&prev_fmts=0x0%2C336x0%2C336x0%2C336x0&nras=2&correlator=7816283270068&frm=20&pv=1&ga_vid=1703933392.1625571519&ga_sid=1628248429&ga_hid=512083593&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=20&ady=2048&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530671%2C20211866%2C31060475&oid=3&pvsid=3914570404160456&pem=447&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&alvm=r20210803&fu=128&bc=31&ifi=12&uci=a!c&btvi=1&fsb=1&xpc=wo2XQE5jq0&p=https%3A//jvpnews.com&dtd=936

அதில் சடலம் ஒன்று இருப்பதை கண்ட நபர் உடனடியாக அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டதுடன், சடலத்தை மூட்டையாக கொண்டு சென்று வைத்துச் சென்ற 28 வயது இளைஞனை நள்ளிரவில் கைது செய்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவரும் நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *