இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் பதிலடி கொடுக்க தயாராகும் இஸ்ரேல்!
இஸ்ரேலுக்கு எதிராக ஒரு நிழல் யுத்தத்தை ஈரான் ஆரம்பித்துள்ளதாக போரியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்ற இந்த நேரத்தில், அதற்குப் பதிலளிக்கப் போவதாக இஸ்ரேல் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இஸ்ரேலின் அந்த எச்சரிக்கையானது கிட்டத்தட்ட ஈரான் மீதான ஒரு போர்ப் பிரகடனம் போலவே தோற்றம் அழிப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் நோக்கர்கள்.
இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் தினம் லெபனானில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்கள், இஸ்ரேலில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஆளில்லா வான்கலன் மூலம் ஓமானில் வைத்து கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பன இஸ்ரேல் பதில் தாக்குதல்களை வழிங்குவதற்கான நியாயப்பாடுகளை இஸ்ரேலுக்கு வழங்குவதாக கூறுகின்றார்கள் இஸ்ரேலிய ராணுவ வல்லுனர்கள்.
3 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கும் பலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையில் 11 நாட்கள் நடைபெற்ற யுத்தத்தின் காட்சிகள் கண்களையும் மனங்களையும் விட்டு நீங்காத நிலையில், மறுபடியும் இஸ்ரேல் எரிகின்ற காட்சியை ஊடகங்கள் சுமந்து வருகின்றன.
இஸ்ரேலின் நகரங்களில் மறுபடியும் எச்சரிக்கை சத்தம் எதிரொலிக்க. உயிரைக் காத்துக்கொள்ள இஸ்ரேலிய மக்கள் ஓடும் காட்சிகள் ஊடகங்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.