திங்கட்கிழமை முதல் கொவிட் சிகிச்சை முறையில் மாற்றம்!

நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு, வைத்தியர்களின் முழுமையான கண்காணிப்பின் கீழ், தமது வீடுகளில் சிகிச்சைகளை வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி , இந்த திட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும் ,நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *