உயிரிழந்த சிறுமியின் மரண விசாரணையில் சந்தேகம்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில், தீக்காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரிஷாட் பதியுதீனின் குடும்ப சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் கூறுகிறார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“மரணம் குறித்த விசாரணைகள் செல்வாக்கின் கீழ் நடத்தப்படுவதாகத் தெரிகிறது, ஷிசாலினியின் தாயின் பின்னால் ஒரு அரசியல்வாதி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணையில் திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் செல்வாக்கு செலுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் கடந்த மாதம் 3ம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜூட் குமார் ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி 12 நாட்களின் பின் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மீள தோண்டியெடுக்கப்பட்டு, பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.