இலங்கையில் கொரோனா மரணம் மேலும் உச்சமடையும் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் நாளாந்த கொரோனா மரணங்கள் மேலும் உச்சமடையும் என்று விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி ,இறுதியாக பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இந்த ஆபத்து நிலையை எடுத்துக் காட்டுகின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்நிலையில் , விசேட வைத்திய நிபுணர்களின் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டுள்ளோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் இந்த ஆபத்தான நிலையை எதிர்கொள்ள அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *