அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தனித்து ஆட்சி அமைப்போம் மைத்தி‌ரி அறிவிப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் சரியான நேரத்தில் அரசாங்கத்தில் இருந்து வௌியேறி, தனித்து ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த அரசாங்கத்தை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரிய பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அதற்கான பிரதியுபகாரம் சரியாக கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *