டெல்டா வைரஸில் இருந்து பாதுகாக்க இரண்டு தடுப்பூசி போடுவது அவசியம்!
டெல்டா என்ற பயங்கரமான மற்றும் மிகவும் தீவிர தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெறுவது மிகவும் அவசியம் என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி இருப்பில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெறும் காலப்பகுதி குறித்து மக்களிடையே நிச்சயமற்ற தன்மை மற்றும் குழப்பம் நிலவுவதாக அவர் கூறியுள்ளார்.
முதலாவது அளவுக்கும் இரண்டாவது அளவுக்கும் இடையிலான தொடர்புடைய காலம் கடந்த போதிலும், எஸ்ட்ராசெனேகாவின் இரண்டாவது அளவை தயக்கமின்றி பெற வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் இரண்டு தடுப்பூசி அளவுகளையும் பெற ஆர்வமாக இருப்பதால் எந்த விதமான தடுப்பூசியையும் பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.