சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குருக்கள் தலைமறைவு!

சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் குளியாபிட்டி − போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து ஆலயமொன்றின் குருக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காதல் தொடர்பை முறிப்பதற்காக, போஹிங்கமுவ பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது 15 வயதான மகளுடன் கடந்த 26ம் திகதி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது, ஆலயத்தின் குருக்களினால் சிறுமி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரான குருக்கள், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், கடந்த சில தினங்களாக ஆலயமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *