இலங்கையில் பரவும் டெல்டா வைரஸால் 3ஆவது தடுப்பூசி வழங்க கோரிக்கை!

தற்போது வேகமாக பரவும் டெல்டா வைரஸ் தொற்று வைத்தியர்கள் உட்பட சுகாதார துறையினரையும் தாக்குவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் கடிதம் ஒன்று அனுப்பி வைத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நோயாளிகளுடன் செயற்படும் வைத்தியர்கள் உட்பட சுகாதார துறையினர் இரண்டு தடுப்பூசிகள் பெற்ற போதிலும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குமாறு தங்கள் கோரிக்கை விடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *