சிறுமியின் சரீரத்தை தோண்டியெடுத்து பரிசோதனை செய்ய உத்தரவு!
அடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை மீண்டும் தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவு
மேலும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகியோரும் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் ஒகஸ்ட் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.