இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 800 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75 ஆவது கூட்டத் தொடரில் உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தொடர்பான முதலவாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜூலை 25 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

உலகில் நீரில் மூழ்குவதால் வருடமொன்றுக்கு 220,000 க்கும் அதிகமானோர் உயிரிழப்பதுடன், அவற்றில் 1/3 மரணங்கள் தென்னாசியாவிலேயே பதிவாவதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *