இலங்கையில் இன்னும் இரண்டு மாதங்களில் பஞ்சம் ஏற்படும் சம்பிக்க தெரிவிப்பு!
சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனங்களுக்கு அமைய இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நாடுகளுக்கும் கீழே உள்ளது.
அடுத்த நிலைமையானது வங்குரோத்து நிலைமையாகும். மிக விரைவில் ஒரு நாள் இலங்கையின் வங்கித்துறை வீழ்ச்சியடைக் கூடும்.
இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையில் நிச்சயம் பஞ்சம் ஏற்படும். தற்போதைய ஆட்சியாளர்களால் அதனை தடுத்து நிறுத்த முடியாது என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.