கொரோனாவால் 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு!
கொரோனா பாதிப்பால் இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு என தகவல் கிடைத்துள்ளது. மக்களவையின் நான்காம் நாள் கூட்டமான இன்று, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமான கருத்தை தெரிவித்துள்ளார். அந்த வகையில், இதுவரை ஏர் இந்தியா விமானத்தில் பணிபுரிந்த 3,573 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நிரந்தரப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், தற்காலிக பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ 90 ஆயிரம் அல்லது இரண்டு மாத ஊதியமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.