மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடரும்!
மறு அறிவித்தல் வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடரும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
”அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும். ஆனால் சாதாரண சேவைகளுக்காக பயணங்களை தளர்த்துவதற்கு இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.” என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து, ரயில் சேவை ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மாகாணாங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனினும், மறு அறிவித்தல் வரை மாகாணங்களுக்கு இடையிலான முழுமையான பயணங்கள் தடை தொடரும் என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.