மீண்டும் நாடு முடக்கப்படுமா?

மக்கள் கோவிட் வைரஸ் தொற்றுடன் தமது இயல்பு வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கு பழக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், பாதிப்பு இன்னும் குறைவடையவில்லை என கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நிலையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பல நாடுகளில் டெல்டா திரிபினால் பாதிப்பேற்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *