குர்பான் கொடுப்பதற்கு கொழும்பு மாநகர சபை அனுமதி!

குர்பான் கொடுப்பதில் சிக்கல்கள் நீடித்த நிலையில், குர்பான் கொடுப்பதற்கு கொழும்பு மாநகர சபையின் அனுமதி கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.டி எம் இக்பால் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.

குர்பான் கொடுப்பவதற்கான அனுமதியை இன்று இரவு 7 மணி வரையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பொதுவாக மாலை 5 மணி வரையுமே அனுமதி பெறுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், இன்று இரவு 7 மணி வரை இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளையும் வழமைபோல (5 மணி வரை) அனுமதி பெற முடியும் என்றும் அந்த உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *