நாட்டை முழுமையாக திறப்பதற்கே முன்னுரிமை நிதியமைச்சர் தெரிவிப்பு!
பொருளாதாரத்தை கையாள்வதற்காகவும் பொதுமக்களிற்கு சலுகைகளை வழங்குவதற்காகவும் நாட்டை முழுமையாக திறப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் நாட்டை மூடவேண்டிய நிலையேற்பட்டதால் தற்போதைய அரசாங்கம் பல உள்நாட்டு சர்வதேச வருமானங்களை இழக்கவேண்டிய நிலையேற்பட்டது என தெரிவித்துள்ள நிதியமைச்சர் நாட்டை திறந்து வைத்திருப்பதன் மூலமே தொடர்ச்சியான வருமானம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயகையிருப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது,தற்போது 4 பில்லியனாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள நிதியமைச்சர் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தங்களால் தீர்வை காணமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.