ரிஷாதின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதூர்தீனின் வீட்டில் வேலைக்கு சென்று உயிரிழந்த டயகம சிறுமிக்கு நீதி கோரி மலையக மக்கள் முன்னணியின் பெண்கள் பிரிவு ஹட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், செயலாளர் விஜயசந்திரன், நிதிச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட் மலையக மக்கள் பெண்கள் முன்னணியின் பெண்கள் பிரிவினர் இந்த ஆய்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் பெண் வன்முறைக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஒழிப்போம் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்திர் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *