மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரம் மீண்டும் திறப்பு!
பாரிஸில் கொரோனா காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரம் இன்று (16) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 13,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோபுரத்தின் மீது செல்லும் ‘லிப்ட்’-ல் வழக்கமாக செல்வதை விட 50 சதவீதம் குறைவான எண்ணிக்கையிலான பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.