சீன தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் 13 பேர் பலி 39 பேர் காயம்!

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் சீனாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள், 2 இராணுவ வீரர்கள் உள்பட 13பேர் உயிரிழந்தனர். 39க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சீனா பல பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால் சீன நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களை பிரிவினைவாத குழுக்கள் எதிர்த்துவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *