மீண்டும் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் ஆராயும் அரசு!
கொரோனா வைரஸின் டெல்ட்டா திரிபு நாட்டின் முக்கியமான இடங்களில் பலரிடமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதால் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க சுகாதார தரப்பு ஆராய்ந்து வருகிறது.
டெல்ட்டா திரிபு வடக்கு மாகாணத்திற்கும் பரவியுள்ளதால் அதனை மேலும் பரவாமல் தடுக்கும் சுகாதார ஏற்பாடுகளை சுகாதார தரப்பு முன்னெடுத்துள்ளது.
இதன்படி இப்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை மேலும் சில வாரங்களுக்கு நீடிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.