இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.10 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1. 53 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

  • புதிதாக 31,443 பேர் பாதித்துள்ளனர்.
  • இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,09,07,282 ஆக உயர்ந்தது.
  • புதிதாக 2,020 பேர் இறந்துள்ளனர்.
  • இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,10,784 ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 49,007 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,00,63,720ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,32,778 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் இதுவரை 38,14,67,646 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *