பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தலில்!
சுகாதார பிரிவின் ஊடகப் பேச்சாளர், பிரதி சுகாதாரப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது அலுவலகத்தில் கடமையாற்றும் உழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பிரதி சுகாதாரப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கொவிட் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.