இலங்கையில் கொரோனா தொற்றால் மரணமாகி அடக்கம் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியது!
நாட்டில் பல இழுபறிகளுக்கு அப்பால் கொரோனா தொற்றினால் மரணமானோரை நல்லடக்கம் செய்யும் அனுமதியை சுகாதார தரப்பினர் வழங்கி இருந்தனர்.
அந்த வகையில் கொரோனா தொற்றினால் மரணமானோரை நல்லடக்கம் செய்ய ஓட்டமாவடி மஜ்மா நகர் தெரிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் இன்று மாலை வரை ஓட்டமாவடி மஜ்மா நகரில் 1,001 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில்,
946 முஸ்லிம்கள்,
24 இந்துக்கள்,
16 கிறிஸ்தவர்கள் மற்றும்
15 பௌத்தர்கள் என அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.