பிரசவித்த சிசுவை எரித்து கொன்ற தாய் கைது!
தான் பிரசவித்த சிசுவை, கொன்று அதனை எரித்த 3 பிள்ளைகளின் தாயொருவர் கந்தளாய் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி ,நேற்று (12) மாலை இச்சிசுவை குறித்த தாய் பிரசவித்துள்ளதுடன், அச்சிசுவை எரித்து, வீட்டுத்தோட்டத்தில் புதைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
அந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபரான தாய் கைதுசெய்யப்பட்டார் என்றும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதானவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதேவேளை, குறித்த பெண்ணின் கடந்த 4 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.