உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில்!
நாட்டில் மேலும் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப் படுத்தப் படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த பரகளை கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று காலை முதல் தனிமை படுத்தப்படுகின்றது.
மேலும் இரத்தினபுரி மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்த 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்