எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

நாட்டில் அடுத்துவரும் சில நாட்களில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, கடந்த சில நாட்களாக மாதிரிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், பெருமளவான மாதிரிகளை பரிசோதனைக்க உட்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே, தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும், இதனால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *