முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது!
மக்கள் விடுதலை முன்னானியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சமந்த விஜயரத்ன மற்றும் நாமல் கருனாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி ,போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னரே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 1 ம் திகதி பொரலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பிலே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ,அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.