தடுப்பூசி செலுத்தியதால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கனடா தலைநகர் ஒட்டாவாவில் அரிதான நிலைமையுடன் இதய நோயாளிகள் மருத்துவமனையை நாடுவதாக ஒட்டாவா இதய நோய் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி தொடர்பான எதிர்வினையாக இருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 8 நோயாளிகள் ஒட்டாவா பல்கலைக்கழக இதய மருத்துவமனையை நாடியுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் ஒரே அறிகுறிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.