தயாசிறி எந்நேரத்திலும் அரசில் இருந்து வெளியேறலாம்!
அரசாங்கத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்கமுடியாவிட்டால் தயாசிறி ஜயசேகர எந்நேரத்தில் வேண்டுமானாலும் வெளியேறலாம். – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பஸில் ராஜபக்சவை தயாசிறி ஜயசேகர கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.