இம்ரான் கான் போல வந்துவிடுவேன் என்ற பயம் பலருக்கு அர்ஜுன தெரிவிப்பு!

நாட்டின் ஜனாதிபதியாகி தலைமைத்துவத்தை ஏற்க தான் தயார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2015ம் ஆண்டு பொது வேட்பாளராக மாதுலுவாவே சோபித தேரர் தன்னையே முன்மாழிந்ததாக அர்ஜுன ரணதுங்க கூறினார்.

தான் ஒரு இம்ரான் கான் போலவந்துவிடுவேன் என்ற பயம் பலருக்கு இருப்பதாக அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *