இலங்கைப் பயணிகளுக்கு ஜூலை 15 வரை டுபாய் வரத் தடை!
ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு இணங்க, டுபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் 2021 ஜூலை 15 ஆம் திகதி வரை பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து டுபாய் வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், UAE GOLDEN விசாக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொவிட் ‑ 19 நெறிமுறைகளுக்கு இணங்க தூதரக பணிகளின் உறுப்பினர்களுக்கு மட்டும் டுபாய் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது