இலங்கையில் இன்னும் 10 வாரங்களில் நான்காவது அலை வெடிக்கும் அபாயம்!
அண்மைய நாட்களில் புதிய டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களை பராமரிக்க அவசர நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், 8 முதல் 10 வாரங்களில் பாரிய கொரோனா வெடிப்பு ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா நோயாளிகள் நிலைமை தொடர்பில் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் மக்கள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிக்காவிட்டால் 10 வாரங்களில் இலங்கையில் நான்காவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இலங்கையில் எதிர்கொள்ளும் முதல் மூன்று COVID-19 அலைகள் ஆல்பா மாறுபாட்டைக் கொண்டிருந்தன, ஆனால் டெல்டா மாறுபாட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், அது 10 வாரங்களில் பாரிய அழிவை ஏற்படுத்தும். இதனால் நான்காவது அலை வெடிக்கும்.
அது பரவாமல் தடுக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம், ஆனால் மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் ,96 நாடுகளில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு வரும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.