அதிக வெப்பநிலையால் கனடாவில் நகரமொன்று அழிந்தது!

கனடாவின் லிட்டன் கிராமம் காட்டுத்தீயால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.

இதன்படி ,15 நிமிடங்களுக்குள் முழு கிராமமும் தீப்பிடித்ததாக லிட்டன் மேயர் ஜான் போல்டர்மேன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார் .

தீ விபத்து ஏற்பட்ட உடனேயே மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

அதற்கமைய ,நகரில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது என்பதுடன் பலர் காயமடைந்த போதிலும், தீ விபத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

பல தசாப்தங்களுக்கு பிறகு கனடாவில் அதிவெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார் .

மேலும் , கடுமையான வெப்பத்தால் கனடாவில் ஐந்து நாட்களில் 486 பேர் இறந்துள்ளனர்.இறந்தவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *