குர்ஆனை மனனம் செய்துள்ள உலகின் முதல் ‘டவுன் சின்ட்ரம்’ சிறுமி!

ஜோர்தான் நாட்டைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றவ்வான் அல் துவைக் என்ற சிறுமி தனக்­கி­ருக்­கின்ற Down syndrome (டவுன் சின்ட்ரம்) குறை­பாட்­டுக்கு மத்­தியில் தற்­போது குர்­ஆனை முழு­மை­யாக மனனம் செய்து சாதனை படைத்­துள்ளார்.

அதன்படி ,குர்ஆனை முழு­மை­யாக மனனம் செய்­துள்ள உலகின் முதல் Down syndrome பெண் பிள்­ளை­யாக றவ்வான் அடை­யாளம் காணப்பட்டுள்ளார்.

தனது தாயின் உத­வி­யுடன் சுமார் ஏழு வருட முயற்­சியின் பல­னாக தற்­போது றவ்வான் குர்­ஆனை மனனம் செய்து முடித்­துள்ளார்.

டவுன் சின்ட்ரம் என்­பது ஒரு பிள்ளை அதன் மர­ப­ணுவின் (டி.என்.ஏ) 21 வது குரோ­மோ­சோமின் கூடுதல் நக­லுடன் பிறக்­கின்ற நிலைமை ஆகும். இந்த பாதிப்பு நிலைமை ட்ரிசோமி 21 என்றும் அழைக்கப்படுகின்­றது. இது உடல் மற்றும் மன வளர்ச்சி மேம்படுவதில் தாம­தங்­களை ஏற்­ப­டுத்­து­வ­துடன் குறித்த விடயங்களில் குறை­பா­டு­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது.

அந்த நிலை­மையே ஆங்­கி­லத்­தில் டவுன் சின்ட்ரோம் என்று அழைக்கப்­ப­டு­கி­றது. இந்த குறை­பாட்­டி­னா­லேயே றவ்வான் பாதிக்கப்­பட்­டுள்ளார்.

ஆறு பிள்­ளைகள் உள்ள குடும்­பத்தில் றவ்வான் கடைசிப் பிள்ளை ஆவார். தந்­தையை இழந்­துள்ள றவ்­வா­னுக்கு நான்கு சகோ­த­ரி­களும் ஒரு சகோ­த­ரரும் இருக்­கி­றார்கள்.

குர்ஆன் வச­னங்­களை எழு­து­வதன் ஊடாக அவர் முழுக் குர்ஆனையும் மனனம் செய்­துள்ளார். தனது மக­ளுக்கு சிறந்த முறையில் உச்­ச­ரிப்புத் திறன் இருப்­பதன் ஊடாக இறைவன் தனது மகளை ஆசிர்­வ­தித்­துள்­ள­தாக றவ்­வானின் தாயான அவாதெப் ஜபர் தெரி­விக்­கிறார். றவ்வான் மிகுந்த விருப்­பத்­துடன் குர்­ஆனை மனனம் செய்து முடித்­துள்­ள­தாக அவ­ரது தாயார் தெரி­விக்­கிறார்.

றவ்­வானின் இந்த சாதனை தொடர்­பாக கருத்து தெரி­விக்கும் அவாதெப் ஜபர் “றவ்வான் பிறந்­த­போது அவர் இவ்­வா­றான நோய்க்குறியால் அவ­திப்­ப­டு­கிறார் என்­பதை அறிந்­த­போது எந்தவொரு தாயையும் போல நானும் சோக­மா­கவும் வருத்­த­மா­கவும் உணர்ந்தேன். ஆனால் நான் றவ்­வானை மிகவும் நேசித்தேன். குர்ஆனைப் படிக்க நான் அவ­ளுக்குக் கற்­பிப்பேன் என்று இறைவனிடம் சத்­தியம் செய்தேன். அதை மனப்­பாடம் செய்­யவே இறைவன் எழு­தி­யி­ருக்­கிறான். அதைப் பாது­காப்­பதன் மூலம் றவ்வான் என்னை கௌர­வித்­துள்ளார்” என தெரி­விக்­கிறார்.

“றவ்வான் மிகவும் புத்­தி­சாலி, அவ­ரு­டைய புத்­தி­சா­லித்­த­னத்­தையும் நுண்­ண­றி­வையும் கண்­ட­றிந்­த­போது மிகச்சிறிய சூராக்­களை அவருக்குக் கற்­பிக்கத் தொடங்­கினேன். அவர் மிக விரை­வாக மனப்பாடம் செய்தார்” என தாயார் அவாதெப் ஜபர் தெரி­விக்­கிறார்.

அந்நிலையில் றவ்வான் ஆறு வயதை அடை­யும்­போது பாடசாலையில் சேர்க்­கப்­பட்டார். அவர் பாட­சாலைக் கல்­வியில் சிறந்து விளங்­கி­ய­போதும் ஏழாம் வகுப்பு வரை மாத்­தி­ரமே அவரால் படிக்க முடிந்­தது. பின்­ நாட்­களில் அவர் பாட­சாலை செல்­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்த நிலையில் குர்­ஆனை மனனம் செய்­வதில் கவனம் செலுத்­தினார்.

எழு­து­வதன் ஊடா­கவே றவ்வான் அதி­க­மாக குர்ஆனை மனனம் செய்­துள்ளார். சூரதுல் பக­ராவை ஒரு வருட காலத்­திற்குள் மனனம் செய்து நிறைவு செய்­த­துடன் அதனைப் பரீட்­சிக்கும் சோத­னையில் மொத்தப் புள்­ளி­க­ளையும் றவ்வான் தன்­வ­சப்­ப­டுத்­தினார்.

தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் குர்ஆனை மனனம் செய்துள்ள றவ்வான் கடந்த றமழான் பிறை 29 இல் மனனம் செய்து நிறைவு செய்துள்ளார்.

மேலும் ,அங்கீகரிப்பட்ட குழுவொன்றினால் அவர் பரீட்சிக்கப்பட்டு அவர் குர்ஆனை மனனம் செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *