25ம் திகதிக்கு பின்னரும் தொடருமா பயணக் கட்டுப்பாடு?

நாடு முழுவதும் மீண்டும் இன்று மற்றும் நாளை (25) அதிகாலை வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ,தற்போது முதல் நாளை 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இன்றைய தினம் பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்குடனேயே இந்த பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுகின்றது.

அதேவேளை , நாளை 25ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவ தளபதி கூறியுள்ளார்.

இருப்பினும் , எதிர்வரும் நாட்களில் காணப்படுகின்ற நிலைமையை கருத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,எவ்வாறாயினும், நாடு தொடர்ந்தும் அபாயத்திலேயே காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *