கடல் உணவுகளை உட்கொள்வது ஆபத்தானதா?

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முதற்கட்டமாக அதன் உரிமையாளர்களிடம் நஷ்ட ஈட்டு கோரப்பட்டுள்ளது. 

குறித்த நிதி அடுத்த இரு வாரங்களுக்குள் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *