பிரபல பாடகி திடீர் மரணம்!

பிரபல பின்னணி பாடகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் தபு மிஷ்ரா.

இவர், இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும், அண்மையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இதனிடையே, அவரது ஆக்சிஜன் அளவு 45-க்கும் கீழ் குறைந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.

100% வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ரத்த கொதிப்பு அல்லது வேறு வகையான இணை நோய்கள் எதுவும் இல்லை. அவர் குணமடைந்து விடுவார் என நம்பிக்கை உள்ளது.

ஆனால் கடந்த 2 நாட்களாக அவருக்கு அளிக்கும் சிகிச்சையை அவர் ஏற்கவில்லை. தீவிர நிலையில் உள்ளார் என அவரது சகோதரி துருதி தீபா மிஸ்ரா கூறினார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார். தபு மிஷ்ராவின் தந்தை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், 9 நாட்கள் கழித்து அவர் உயிரிழந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *