ஏறாவூர் சம்பவம் தொடர்பில் கடமையில் இருந்த இராணுவ வீரர்கள் இடைநிறுத்தம்!
மட்டக்களப்பு ஏறாவூரில் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முழுமையான விசாரணைகள் முடிந்ததும், தவறு செய்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.