தாயை கொன்று சமைத்து சாப்பிட்ட மகனுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை!

ஸ்பெயினில்  பெற்ற தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, அதை சமைத்து சாப்பிட்ட இளைஞருக்கு நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டணை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம்  ஆண்டில் ஸ்பெயின் நாட்சைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெற்ற தாயையே கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டது பற்றிய தகவல் வெளியாகி உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞரின் பெயர் ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இந்த 28 வயது இளைஞர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 60 வயதான தனது தாயுடன் ஏற்பட்ட தகராறால், பெற்ற தாயையே கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி அந்த உடல் பாகங்களில் சிலவற்றை சமைத்து சாப்பிட்டார். மேலும் தனது நாய்க்கும் அதனை உணவாக அளித்தார். 

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆல்பர்ட்டோவின் தாயின் நெருங்கிய தோழி ஒருவர் தனது தோழியை நீண்ட நாட்களாக காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆல்பர்ட்டோவின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் டப்பாக்களில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர். 

இதையடுத்து அவர்கள் ஆல்பர்ட்டோவைவிடம் விசாரணை நடத்தியபோது உண்மை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஆல்பர்ட்டோவை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று(ஜூன் 17) மாட்ரிட் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் ஆல்பர்ட்டோ, கொலை நடந்த சமயத்தில் தான் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஆல்பர்ட்டோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *