ஓட்டமாவடியில் இதுவரை 649 கொரோனா உடல்கள் அடக்கம்!
கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மைய வாடியில் நேற்று (16) மாலை வரை 649 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.
குறித்த மையவாடியில் நேற்று வரை,
612 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளதுடன்
15 இந்து உடல்களும்,
14 கிறிஸ்தவ உடல்களும்
06 பௌத்த உடல்களும்,
02 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 649 உடல்கள் அடக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.