ஐ.சி.சியில் வெற்றிவாகை சூடும் அணிக்கு 31 கோடி ரூபாவுக்கு அதிக பரிசு!

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடும் சம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.

அதன்படி ,இது இலங்கை மதிப்பில் 31 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.

உப சம்பியன் அணிக்கு எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுவதுடன், ‍உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு நான்கு இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர் கிடைக்கும்.

இப்போட்டித் தொடரின் 4 ஆம் இடத்தை பிடிக்கும் அணிக்கு மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலரும், 5 ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு இரண்டு இலட்சம் அமெரிக்க டொலரும் கிடைக்கும்.

மேலும் ,9 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில் ஏனைய இடங்களைப் பிடித்த நான்கு அணிகளுக்கும் தலா ஒரு இலட்சம் டொலரும் வழங்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *