கூட்டமைப்பு − ஜனாதிபதி சந்திப்பு திடீரென ரத்து!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை நடத்தவிருந்த விசேட சந்திப்பு திடீரென பிற்போடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பை ஜனாதிபதி தரப்பு இரத்து செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு புதிய திகதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.