மொட்டு கட்சிக்குள் குழப்பம்! எட்டு கட்சிகள் கடுமையான கண்டனம்!!
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்விற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம் சொல்ல சில நபர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பொதுஜன பெரமுனவின் 08 கட்சிகள் கண்டித்துள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்றும், இந்த விடயத்தில் அமைச்சர் மீது மட்டுமே குற்றம் சொல்ல முடியாது என்று கூறி அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.