இந்திய பிரபல நடிகர் விபத்தில் மரணம்!

பைக் விபத்தில் படுகாயமடைந்த நடிகர் சஞ்சாரி விஜய், சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார். அவருக்கு வயது 38. இதையடுத்து அவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் ’ரங்கப்பா ஹோபிட்னா’, ’தசவலா’, ’ஹரிவு’, ’கில்லிங் வீரப்பன்’, ’நானு அவனல்ல..அவளு’உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ’நானு அவனல்ல.. அவளு’ படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

இவர் தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு அவருடன் மோட்டார் சைக்கிளில் பெங்களூருக்கு சனிக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தார். சஞ்சாரி விஜய் பைக்கிn பின் இருந்ததாகக் கூறப்படுகிறது. மழை காரணமாக சாலை ஈரமாக இருந்ததால், திடீரென வழுக்கிய பைக், மின் கம்பம் ஒன்றில் பயங்கரமாக மோதியது. இதில் சஞ்சாரி விஜய்யின் தலை மற்றும் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மூளைச் சாவு அடைந்தார்.

இது குறித்து விஜய்யின் சகோதரர் சித்தேஷ் கூறும்போது, விஜய்யின் உடல் உறுப்புகளை தானம் செய்யப் போகிறோம். சமூகத்திற்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைந்தவர் சஞ்சாரி விஜய். அதனால் அவரின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

சஞ்சாரி விஜய்யின் மரணத்தை அடுத்து, சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *